திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம்:ஜன. 26-ல் ஆராதனை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2023 11:12
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா ஜனவரி 26ம் தேதி துவங்குகிறது.
இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் கால் நடும் விழா இன்று (14ம் தேதி) காலை நடைபெற்றது. இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர். சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை மகோத்சவ விழா ஜனவரி 26ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30ம் தேதி ஆராதனை விழா நடைபெறுகிறது. இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். ஜனவரி 26 ஆம் தேதி மாலை 5 மணி யளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் சபா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.