செஞ்சி கிருஷ்ணர் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2023 05:12
செஞ்சி; செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்து கலசாபிஷேகம் நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு கிருஷ்ணர், ராதா ருக்மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. காலை 9 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமமும், 10 மணிக்கு சிலை பிரதிஷ்டையும், தொடர்ந்து கலசபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.