ஸ்ரீவில்லிபுத்தூர்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டு அணிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பஞ்சாங்கத்தின் கணக்குபடி மார்கழி மாதம் நேற்று இரவு பிறந்தது. இதனை முன்னிட்டு தான் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டுசேலையை அணிந்து ஆண்டாள், ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கண்ணாடி மாளிகையில் ஆண்டாள்,ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு ஆண்டாள் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.