Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 70 ஆண்டுக்குப் பின்.. மேலாடையின்றி ... மார்கழி பிறப்பு; திருப்பாவை பட்டில் ஆண்டாள் தரிசனம்.. விழாக்கோலம் பூண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கழி பிறப்பு; திருப்பாவை பட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி மலர்ந்தது ; அதிகாலையில் சுத்தமான காற்று.. வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்களுடன் உற்சாகம்
எழுத்தின் அளவு:
மார்கழி மலர்ந்தது ; அதிகாலையில் சுத்தமான காற்று.. வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்களுடன் உற்சாகம்

பதிவு செய்த நாள்

17 டிச
2023
07:12

மதுரை: அதிகாலையில் தெருக்களை அலங்கரித்த வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்கள் என, இந்தாண்டு உற்சாகமாக மார்கழி மாதம் துவங்கி விட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தெருக்களில் வெண்ணிற அரிசி மாவு உட்பட பல்வேறு வண்ணங்களில், அழகிய கோலங்கள் இடப்படுகின்றன. அதிகாலையில் வண்ணக் கோலங்களும், பஜனை முழக்கங்களுமாக மார்கழி களைகட்டியுள்ளது. அதிகாலை முதல் அனைத்து பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில், திருப்பாவை, திருவெம்பாவை முழங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மார்கழியில் அதிகாலையில் வீசும் குளிர்ந்த சுத்தமான காற்று சுவாசத்திற்கு ஏற்றது. இறைவன் மீதான பஜனை பாடல்களை பாடவும், கேட்கவும், மாசில்லாத இயற்கை காற்றை சுவாசிக்கவும் கிடைக்கும் அரிய வாய்ப்பு, இந்த மாதத்தில் தான் வாய்க்கிறது.மார்கழி கோலத்தின் சிறப்பு, சாணம் தெளித்து கோலமிட்டு அதன் மேல் பூசணி பூ வைப்பது தான். அதனால், கிருமிகள் அகன்று நோய் தொற்று பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆனால், இன்று ஒரு சில கிராமங்களில் மட்டுமே, பூசணி பூ கோலத்தை பார்க்க முடிகிறது.பெரும்பாலான பெண்கள், அதிகாலையில் நீடிக்கும் அடர்த்தியான பனி பொழிவு மற்றும் மர்ம நபர்களின் நகை பறிப்பு காரணமாக, முன் இரவிலேயே கோலம் போட்டு விடுகின்றனர்.

மார்கழித் திங்கள் தேவர்களுக்கு வைகறைப் பொழுது. இந்த மாதம் முழுவதும் நாம் செய்யும் தெய்வ வழிபாடுகள். பண்மடங்கு பலனைப் பெற்றுத் தரும்.  அதிகாலை எழுந்து நீராடுவதும், வாசல் தெளித்து தினம் ஒரு கோலம் போட்டு, சாணப் பிள்ளையார் படித்து வைத்து, பூசணிப் பூ வைத்து வழிபடுவதும்  மார்கழியின் ஸ்பெஷல். முற்காலத்தில் எல்லோரு வீட்டிலும் பூசணிப் பூ வைப்பது இல்லை. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை கல்யாணத்துக்காக காத்திரு க்கிறார்களோ, அவர்கள் வீட்டின் முன் மட்டும் பூசணிப்பூ வைப்பார்களாம். அவர்களைப் போன்றே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் வீட்டார் இதைப் புரிந்து  கொள்வர். தைமாதம் பேசி முடிப்பார்களாம்.

மார்கழியின் மற்றொரு சிறப்பம்சம் திருப்பாவை. திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபடுவது. திருப்பாவையை அருளியது ஆண்டாள். திருவெம்பாவை  மாணிக்கவாசகரால் அருளப்பட்டது. இவை இரண்டுமே பாவை நூல்கள். இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இந்த நூல்களின் முதல் பாடல்களில், ஆண்டாள் தனது  திருப்பாவையில் மா என்ற எழுத்தைக் கொண்டு மார்கழித் திங்கள்.... எனத் துவங்குகிறாள். இது மாணிக்க வாசகரை நினைவுப்படுத்துகிறது. அவரோ ஆ என்ற  எழுத்தை முன்வைத்து ஆதியும் அந்தமும்... என்று தொடங்குகிறார். இது ஆண்டாளைச் சிறப்பிக்கிறது எனச் சிலாகிப்பார்கள் ஆராய்ச்சி அறிஞர்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar