Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பெயர்ச்சி ; விஸ்வரூப பஞ்சலோக ... திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதியில் கோயில் ஆழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் குவிந்த முருகன், ஐயப்ப பக்தர்கள்; இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் குவிந்த முருகன், ஐயப்ப பக்தர்கள்; இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

19 டிச
2023
05:12

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிகளவில் ஐயப்பன், முருக பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.

கோயிலுக்கு வழக்கமாக வரும் உள்ளூர் பக்தர்களுடன் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன் கோயிலுக்கும், பழனி முருகன் கோயிலுக்கும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வருவர். திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருப்பதால், ஏராளமான பக்தர்கள் முதல் நாள் இரவு திருப்பரங்குன்றம் வந்து தங்கி மறுநாள் அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து விட்டு மற்ற ஊர்களுக்கு செல்வர். இந்த மூன்று மாதங்களிலும் அதிகாலை 4:30 மணியிலிருந்து காலை 10:00 மணி வரையிலும் ஐயப்பன், முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் வருவர். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் வழக்கத்தைக் காட்டிலும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் வந்தனர். சாதாரண நாட்களில் மூலஸ்தானத்தில் கட்டண தரிசன பக்தர்கள் ஒரு வரிசையிலும், இலவச தரிசனம் பக்தர்கள் ஒரு வரிசையிலும் அனுப்பப்படுவர். கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது இலவச தரிசன பக்தர்கள் மூலஸ்தானத்தில் மூன்று வரிசைகளில் அனுப்பப்படுவர். இன்று அதிகளவில் பக்தர்கள் வந்த போதும், கோயிலுக்கு வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் இரண்டு வரிசைகளில் மட்டுமே அனுப்பப்பட்டனர். இதனால் இலவச தரிசன பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றத்தில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் ரத வீதிகள், பெரிய ரத வீதி, ஜி.எஸ்.டி. ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் சீராக நிறுத்தப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் கோயிலுக்குள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகமும், வாகனங்களை சீர்படுத்த போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar