ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.46 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2023 11:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியலில் ரூ.1.46 கோடி காணிக்கையாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாள்களுக்குப் பின்பு நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். இதனை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 46 லட்சத்து 47 ஆயிரத்தி 540 ரூபாயும், தங்கம் 84 கிராம், வெள்ளி 6 கிலோ 720 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இதில் கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி பலர் பங்கேற்றனர்.