Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டதேவி கோயில் புதிய தேர் நிலைக்கு ... காரமடையில் 11 ஆயிரம் வீடுகளுக்கு அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழ் காரமடையில் 11 ஆயிரம் வீடுகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் ஆதியோகி ரதயாத்திரை கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவையில் ஆதியோகி ரதயாத்திரை கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2024
06:01

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து, மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரையை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார்.

கோவை ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களை அழைக்கும் வகையில், ஆதியோகி ரத யாத்திரை துவக்க விழா நேற்று முன்தினம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில், ஈஷா சம்ஸ்கிருதி ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். தொடர்ந்து கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், ஆதியோகி ரதயாத்திரையை துவக்கி வைத்தார்.ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள், தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளன. இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 20 ஆயிரம் கி.மீ., தூரம் வரை பயணிக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதியோகிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். ஒவ்வொரு ரதமும், ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின், மஹா சிவராத்திரி அன்று, கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடைய உள்ளது. இவ்விழாவில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பேசுகையில்," இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடி சென்று வணங்குவது. மற்றொன்று, இறைவன் நமக்காக வீதிகள் தோறும் வந்து அருள் பாலிப்பது. அந்த வகையில் இந்த ஆதியோகி ரத யாத்திரை, அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையோடு, தமிழகமெங்கும் வலம் வர இருக்கிறது. சிவபெருமானுக்குரிய மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது. சிவகண வாத்தியம், திருமுறை பன்னிசை, போற்றி வழிபாடு உள்ளிட்டவைகளோடு வலம் வர இருக்கிற ரத யாத்திரையை அடியார்கள் பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar