Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் பறவைகளுக்கு அன்னமிடும் ... ஆந்திராவின் வீரபத்ரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு ஆந்திராவின் வீரபத்ரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

16 ஜன
2024
05:01

மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் 25வது குருமகாசந்நிதானம் தவத்திரு மருதாச்சல அடிகளார் நிருபர்களிடம்  கூறுகையில்; தமிழகத்தின் சைவ சித்தாந்தத்தை வடிவமைத்துக் கொடுத்ததில் முதன்மையானவர் மெய்கண்டார். சிவஞானபோதத்தை தந்தவரும் அவர்தான். அவர் ஞானம் பெற்ற திருவெண்ணைநல்லூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில்  மெய்கண்டார் சிலை பிரமாண்டமாக அமைக்க  வேண்டும்.‌ திருவாவடுதுறை ஆதீனத்தை நெறியாளராக கொண்டு செயல்படுத்திட அடியார்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். கோயில் இடம் அல்லது அரசு இடத்தில் அமைய தமிழக அரசு துணை நிற்க வேண்டும்.

 மெய்ண்டாருக்கு பெரிய அளவில் சிலை அமைத்து 274 தலங்களையும் இடம்பெற செய்யலாம். திருவெண்ணைநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் மெய்கண்டார் சிலை அமைப்பதன் மூலம் சென்னையில் இருந்து தென் தமிழகம் செல்லக்கூடிய அனைவரும் எளிதில் அங்கு வந்து சென்று பார்வையிட்டு வழிபட்டு பயன்பெற ஏதுவாக அமையும்.
இது குறித்து தமிழக அரசு உடனடியாக பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ராமபிரான் அவதரித்த அயோத்தியில் நீண்ட நாட்களாக கோயில் எழுப்ப வேண்டும் என்ற பலரின்  தவம் தற்போது நிறைவேறியுள்ளது. இந்து அமைப்புகள் அதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ராமர் கோயில் மிக அழகிய வேலைபாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

அயோத்தியின் ஒரு சேர பக்தர்கள் வந்தால் சிரமம்  என்பதை சரியாக திட்டமிட்டு, வீட்டிலிருந்தபடியே ராமர் சிலை பரிதிஷ்டை செய்யக்கூடிய 22ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி அட்சதையை தலையில் போட்டுக்கொண்டு ராம நாமத்தை ஓதி சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் மாலை நேரத்திலும் வீடுகளில் சிறப்பு வழிபாடு செய்யலாம். தைப்பூச நாட்களில் அனைத்து பக்தர்களும் வழிபட ஏதுவாக முருகனின் அறுபடை கோயில்களில்  சிறப்பு கட்டணம் ஏதும் இல்லாமல் வழிவகை செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும். பழனி முருகனுக்கு பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வருகிறார்கள்.  காவடி எடுத்து வரக்கூடிய பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மூலவருக்கு அதனை கொண்டு அபிஷேகம் செய்ய முடியாவிட்டாலும் உற்சவர் அமைத்து அவர்கள் கண் முன் அபிஷேகம் நடத்திட முன் வந்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் அதற்கும் அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar