Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதீன பட்டண பிரவேசம் ... இன்று நவமி; ஸ்ரீராமஜெயம் கூறி ராமரை வழிபட நல்லதே நடக்கும் இன்று நவமி; ஸ்ரீராமஜெயம் கூறி ராமரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை திருப்பதி பெருமாள் கோவிலில் கவர்னர் ரவி ராமரை தரிசனம் செய்தார்
எழுத்தின் அளவு:
சென்னை திருப்பதி பெருமாள் கோவிலில் கவர்னர் ரவி ராமரை தரிசனம் செய்தார்

பதிவு செய்த நாள்

18 ஜன
2024
11:01

சென்னை; தி.நகர்., திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த கவர்னர் ரவி, அங்கு நிறுவப்பட்டிருந்த ராமர் சிலையை தரிசனம் செய்தார்.

ஆயோத்தி ராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை வரும், 22ம் தேதி நடக்கவுள்ளது. அதனை் முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தி.நகர் பெருமாள் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு தினசரி ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று இரவு தமிழக கவர்னர் ரவி தனது மனைவியுடன் தி.நகர் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரை டி.டி.டி., தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து, கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின், கோவில் முகப்பில் நிறுவப்பட்டுள்ளது ராமர் சிலை தரிசித்து, மூலவர் வெங்கடேஷ்வரரையும் தரசித்தார். இதையடுத்து, மேடையில் நடந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மாசுப்ரமணியனின் நடனத்தையும் கண்டு ரசித்தார். பின், அவருக்கு சால்வை அணிவித்த கவர்னர் மரியாதை செலுத்தினார்.

டி.டி.டி., தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் கூறியதாவது: அயோத்தி ராமர்கோவில் பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு, டி.டி.டி., தி.நகர் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு வரும், 26ம் தேதி வரை ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், இன்று தமிழக கவர்னர் ரவி பங்கேற்று ராமபிரானை தரிசித்து, கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இந்நிகழ்ச்சியில் வரும் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. வரும், 22ம் தேதி தி.நகர் பெருமாள், தாயார் கோவிலில் காலை 7:00 முதல் இரவு 9:00 மணிவரை தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. ஏராளமான வேதபண்டிதர்கள் பங்கேற்கின்றனர். அன்று முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar