Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகன் முருகனை காண.. அறுபடை வீடுகளில் ... மதுரை மீனாட்சி தெப்ப திருவிழா; வண்டியூர் தெப்பக்குளத்தில் பக்தர்கள் தரிசனம் மதுரை மீனாட்சி தெப்ப திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகம் முழுதும் தைப்பூச விழா; சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கையில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உலகம் முழுதும் தைப்பூச விழா; சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கையில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 ஜன
2024
01:01

தைப்பூச விழா தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசிய, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும் பத்து மலை எனும் பட்டு குகைகளில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல லட்சக்ணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவைக் கண்டுகளிக்கவே பல்லாயிரக்காணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கோலாலம்பூரில் இருக்கும் மகாமாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பக்தர்கள் பலவகையான காவடிகளை ஏந்தி சுமார் 15 கிமீ நடந்து பட்டு குகையை அடைந்தனர். பக்தர்கள் 272 படிகள் ஏறி வந்து கந்தனை தரிசித்து பக்திப் பெருக்கோடு வழிபட்டு சென்றனர், அங்கு நடப்பட்டிருக்கும் வேல்தான் மிக முக்கியமான வழிபாட்டுச் சின்னம் .

இலங்கையில் தைப்பூசத்தன்று வீட்டை நன்கு சுத்தம் செய்து, வயலில் விளைந்த புது நெல்லைக் குத்தி அரிசியாக்கி அதனை சாதமாக வடித்து அதோடு பால், பழங்கள், சர்க்கரை சேர்த்து இறைவனுக்குப் படைத்து தாங்களும் உண்ணுகிறார்கள். இங்கு கொழும்பில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாககொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் கூட உண்டு என்பது இதன் சிறப்பு.

சிங்கப்பூரில்  தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம் மிகவும் விசேஷம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தைப்பூசத்துக்கு முதல் நாள் முருகன் வெள்ளிரதத்தில் லயன்சித்தி விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். நேற்று முதல் பக்தர்கள் காவடிகள் எடுத்து தரிசனம் செய்து வருகின்றனர். இதை செட்டிப்பூசம் என்று அழைக்கிறார்கள். உலகம் முழுதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar