Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புல்லாணி மாரியம்மன் கோயிலில் ... சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வழிபாடு; குதூகலத்துடன் கொண்டாட்டம் சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிவாசல் திறப்பு விழா; மத நல்லிணக்கத்துடன் சீர்வரிசை எடுத்து வந்த இந்து பெண்கள்
எழுத்தின் அளவு:
பள்ளிவாசல் திறப்பு விழா; மத நல்லிணக்கத்துடன் சீர்வரிசை எடுத்து வந்த இந்து பெண்கள்

பதிவு செய்த நாள்

26 ஜன
2024
10:01

காரைக்குடி; கல்லல் அருகே 350 ஆண்டு பழமையான பள்ளிவாசல், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்ட நிலையில் இந்து மத பெண்கள் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக சீர்வரிசை பொருள்களுடன் வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லல் அருகே உள்ள ஆலம்பட்டு குருந்தம்பட்டு கிராமத்தில் ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. 350 ஆண்டு பழமையான இந்த பள்ளிவாசல் தற்போது பழமை மாறாமல் மீண்டும் அதே பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் வளாகத்தில் முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளிவாசலை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.எம் பாஷா திறந்து வைத்தார். இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு ஆலம்பட்டு குறுந்தம்பட்டு கல்லல் உட்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இந்து மத பெண்கள் தலையில் சீர்வரிசை பொருட்களுடன் வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ந்த இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

முன்னாள் நீதிபதி பாஷா கூறுகையில்: 350 ஆண்டுகால பழமையான பள்ளிவாசல், தொழிலதிபர் முஸ்தபா உதவியால் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேலும் அனைத்து சமூக மக்களும் சீர்வரிசை எடுத்து வந்து பள்ளிவாசல் விழாவில் கலந்து கொண்டது மறக்க முடியாத திருநாள். இந்தியாவில் பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் இருந்தாலும் ஒற்றுமையில் வேற்றுமை காணும் நாடு இந்தியா. என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் ஒரே இடத்தில்  12 பெருமாள் கருட சேவை வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் கண்ணை கவரும் வேலைபாடுகளுடன் கூடிய சல்லடம் எனும் ஆடை அணிந்து ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar