கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தொண்டாலை மேலக்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த ஆதி அடைக்கலம் காத்த விநாயகர் கோயில் உள்ளது. இங்கு நேற்று மாலை 5:30 மணி அளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட முதல் காலயாக சாலை பூஜை துவங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. கருப்பண்ண சுவாமி, அம்மையார் மற்றும் சீலைக்காரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. யாகசாலை பூஜை நிறைவிற்கு பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை (ஓய்வு) பெற்ற எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் தொண்டாலை மேல்கரை கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.