Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மாரியம்மன் கோவிலில் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு; பக்தர்கள் பரவசம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறு நாட்கள் பாத யாத்திரையாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
ஆறு நாட்கள் பாத யாத்திரையாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த முஸ்லிம்கள்

பதிவு செய்த நாள்

03 பிப்
2024
10:02

அயோத்தி: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு, அம்மாநில தலைநகர் லக்னோவில் இருந்து ஆறு நாட்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெறும் கால்களுடன் பாத யாத்திரையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 350 பேர் சென்று வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில், கடந்த மாதம் 22ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்ய, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஒரு பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 350 பேர் கொண்ட குழுவினர், ராமர் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள கடந்த மாதம் 25ம் தேதி உ.பி., மாநில தலைநகர் லக்னோவில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெறும் காலுடன் பாத யாத்திரை மேற்கொண்ட இக்குழுவினர், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி, நேற்று முன்தினம் 150 கி.மீ., கடந்து அயோத்தி ராமர் கோவிலை அடைந்தனர். அதன்பின், பகவான் ராமரை வணங்கி, தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர். இது குறித்து, முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ராய்ஸ் கூறுகையில், பகவான் ராமர் நம் அனைவருக்கும் மூதாதையர். ஜாதி, மதம் ஆகியவற்றை விட நம் நாடும், மனித நேயமும் முதன்மை பெறுகிறது. எந்த மதமும் மற்றவர்களை விமர்சிக்கவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேச கற்பிக்கவில்லை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar