Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே நாளில் 7 வாகனங்களில் வலம் வரும் ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் சேதம் : பக்தர்கள் அவதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் தரிசனம்; விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்தோம் என பேட்டி
எழுத்தின் அளவு:
அயோத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் தரிசனம்; விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்தோம் என பேட்டி

பதிவு செய்த நாள்

13 பிப்
2024
05:02

லக்னோ: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர், ‘வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு அமைதியை உணர்ந்தோம்‘ என கெஜ்ரிவால் மகிழ்சியுடன் தெரிவித்தார். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், கடந்த ஜன., 22ம் தேதி, பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

கிடைத்தது அமைதி; இந்நிலையில், இன்று(பிப்.,12) அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் சென்றார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது: இன்று, நானும், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் எங்கள் குடும்பத்தினரும் அயோத்தியில் ராமர் கோயிலில் தரிசனம் செய்தோம். வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு அமைதியை உணர்ந்தோம் எனக் கூறினார்.

ஜெய் ஸ்ரீ ராம்; ராமர் கோயிலில் எடுத்த புகைப்படத்தை கெஜ்ரிவால் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று என் பெற்றோர் மற்றும் என் மனைவியுடன் அயோத்தி சென்று ஸ்ரீ ராமர் கோயிலில் தெய்வீக தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். ராமர் அனைவருக்கும் ஆசி வழங்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம். இவ்வாறு அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar