Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் ... திருப்புத்தூர் கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் திருப்புத்தூர் கோட்டைக் கருப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவில் உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவில் உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

21 பிப்
2024
05:02

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கின.

கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். கோவிலில் மாசி மாதம் உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு கோவில் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்திற்கு சொந்தமான 40 யானைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தன. மஞ்சுளால் பகுதியில் இருந்து ஆரம்பித்த யானையோட்டத்தில் தேவதாஸ், ரவி கிருஷ்ணன், கோபி கண்ணன் ஆகிய யானைகள் முன் வரிசையில் நின்று போட்டி போட்டு ஓடியது. தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்த கோபி கண்ணன் யானை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோபி கண்ணன் என்ற யானை வெற்றி பெறுவது 9-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கோபி கண்ணன் யானை சுற்றம்பலத்தை ஏழு முறை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகளுக்கு யானையூட்டு (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடந்தன. இந்த நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தது. இனி வரும் 10 நாட்கள் விழாவில் உற்சவர் கோபிக் கண்ணன் யானை மீது அமர்ந்து பவனி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காலை உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவ மூர்த்தியை கண்டு வணங்கி பக்தி பரவசம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar