Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 500 ஆண்டுகள் பழமையான வையம்மாள் ... பரமக்குடி டூ திருச்செந்தூர் சைக்கிள் யாத்திரை; 300 பக்தர்கள் பயணம் பரமக்குடி டூ திருச்செந்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெற்றி பட்டம் கட்டிய யானையுடன் திருவிழா ஊர்வலம்
எழுத்தின் அளவு:
நெற்றி பட்டம் கட்டிய யானையுடன் திருவிழா ஊர்வலம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2024
11:02

பந்தலூர்; பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 25 ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து மாலை தட்டாம்பாறை மாரியம்மன் கோவிலில் இருந்து, நெற்றி பட்டம் கட்டிய யானையுடன், செண்டை மேளம், நாதஸ்வரம், அம்மன்குடம், தேவரூபம், கரகாட்டம்,ஆதிவாசி மேள வாத்தியங்களுடன், அம்மன் கோவில் வந்தடைந்தது.

திருவாதிரை கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, உஷ பூஜை, கஜபூஜை, அன்னதானத்துடன் தட்டம் பாறை ராஜூ மாஸ்டர் வீட்டிலிருந்து, உண்டியல் ஊர்வலம் வெற்றி பட்டம் கட்டிய யானை , செண்டை மேளம் பழங்குடியின இசை வாத்தியம், மற்றும் கரகாட்டம், கைதட்டி ஆட்டம், மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட ராணி என்ற யானையிடம், பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். தொடர்ந்து கோவிலில் அன்னதானம் மேலும் மதிய பூஜை அதனைத் தொடர்ந்து வாளாட்டு ஸ்ரீ மகா விஷ்ணு கோவில், மற்றும் பாலமுருகன் கோவில், ஐயப்பன் கோவில் பகுதிகளுக்கு யானையுடன் பக்தர்கள் சிறப்பு ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து இரவு அன்னதானம் மற்றும் ஆதிவாசிகள் நடனம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் இன்று அதிகாலை, ஆழி பூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு, சாமி அருள்வாக்கு கூறுதலுடன் விழா நிறைவு பெற்றது. திருவிழாவில் பழங்குடியினர் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மன் அருள் பெற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு, திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக ... மேலும்
 
temple news
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar