Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் திதி பூஜைக்கு ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளழகர் கோவில் கோட்டை சுவர் புனரமைப்பு பணிகள் வீடியோ பதிவு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
எழுத்தின் அளவு:
கள்ளழகர் கோவில் கோட்டை சுவர் புனரமைப்பு பணிகள் வீடியோ பதிவு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்

02 மார்
2024
01:03

சென்னை: கள்ளழகர் கோவில் கோட்டைச் சுவர்களை புனரமைக்கும் பணிகள் அனைத்தையும், வீடியோ பதிவு செய்யும்படி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், கோட்டைச்சுவரில் பதிக்கப்பட்ட கற்கள் ஒவ்வொன்றின் மீதும், எந்த ஒரு பணியையும் துவக்கும் முன் எண்ணிட்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்த பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கோவில்கள் பாதுகாப்பு, புனரமைப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி கூறியதாவது:

மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோவிலின் பழுதடைந்த கோட்டைச் சுவர்களை, பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை செய்து வரும் அறநிலையத்துறையினர், புல்டோசர் இயந்திரங்கள் கொண்டு, 1 கி.மீ., நீளத்துக்கு அதிகமாக உள்ள சுற்றுச்சுவரை அகற்றுகின்றனர். பழமையான கட்டுமானத்தை புதுப்பிக்க ஒப்புதல் வழங்கும் முன், மாநில அளவிலான நிபுணர் குழு ஆய்வு செய்யவில்லை. ஆனால், புனரமைக்கும் பணிக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு கூறிய அவர், அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி வாதாடியதாவது: மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெற்றும், அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்படியும் தான் பழமையான சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு, திரும்ப கட்டும் பணி நடக்கிறது. ஏற்கனவே உள்ள கற்களை அகற்றும் முன், அதற்கு எண்ணிடப்படுகிறது. திரும்ப அதே கற்களை கொண்டே, பழமை மாறாமல் சுவர் கட்டப்படும். கற்களுக்கு எண்ணிட்டு திரும்பவும் அதே மாதிரி கட்டுவது உள்பட, அனைத்து பணிகளும் வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் வாதாடினார். இதையடுத்து, கட்டுமானம் சார்ந்த பணிகளையும், கோட்டை சுவரில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் ஒவ்வொன்றின் மீதும் எண்ணிட்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்த பாதுகாக்க வேண்டும்; அதை வீடியோ பதிவும் செய்ய வேண்டும் என, அறநிலையத் துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar