Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆந்திராவிலிருந்து ஆதியோகி தேர் ... அபுதாபி இந்து கோயிலில் ஒரே நாளில் 65000 பக்தர்கள் தரிசனம் அபுதாபி இந்து கோயிலில் ஒரே நாளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தெப்பத் திருவிழா ; துர்கா ஸ்டாலின் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தெப்பத் திருவிழா ; துர்கா ஸ்டாலின் வழிபாடு

பதிவு செய்த நாள்

04 மார்
2024
10:03

மயிலாடுதுறை; சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் இந்திர திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சியாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்  வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவபெருமான் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் கொண்டு இங்கு அகோரமூா்த்தியாக  தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய ஸ்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர பெருவிழா, கடந்த  மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன துவங்கியது.தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக  12 ஆம் நாள் திருவிழாவான தெப்பத்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.தெப்பத் திருவிழாவை முன்னிட்டு  பிரம்ம வித்யாம்பிகை உடனான சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில். எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் தெப்பத் திருவிழாவில் பங்கேற்று தெப்பத்தில் ஒரு முறை சந்திர தீர்த்த குளத்தில் வலம் வந்து வழிபாடு மேற்கொண்டார்  அதனைத் தொடர்ந்து தீர்த்த குளத்தில் தெப்பம் 5 முறை வலம் வந்தது.இவ்விழாவில் திரளான பக்தர்கள்  கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar