Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபுதாபி சுவாமி நாராயண் கோவிலில் ... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 மார்
2024
03:03

திருப்புவனம்; திருப்புவனம் புதூர் எல்லை காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இரவு 8:50 மணிக்கு கொடிமரத்திற்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்திற்கு பின் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூ மாலைகள் கொடிமரத்திற்கு அணிவிக்கப்பட்டது. நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர் நடத்தி வைத்தார். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை ஏந்தி வந்து நேர்த்திகடன் செலுத்துவார்கள், வரும்12ம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் வேலுச்சாமி, மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar