Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி; ஆதி வாலீஸ்வரர் ... மகா சிவராத்திரி; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் மகா சிவராத்திரி; திருவண்ணாமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச பூதங்களை பாதுகாக்க அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை 4000கி.மீ இளம் பெண் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பஞ்ச பூதங்களை பாதுகாக்க அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை 4000கி.மீ இளம் பெண் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

08 மார்
2024
03:03

திருப்புவனம்; பஞ்ச பூதங்களான நீர், நிலம், வான், நெருப்பு, காற்று ஆகியவற்றை பாதுகாக்க வலியுறுத்தி இளம்பெண் உள்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஷிப்ரா பதக் , இளம்பெண் துறவியான இவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், பஞ்ச பூதங்களை பாதுகாக்க வேண்டும், அடுத்த உலக போர் தண்ணீருக்காகத் தான் நடைபெறும் என்றும் எனவே அவற்றை பாதுகாக்க வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பர் மாதம் ஷிப்ரா பதக் இவரது தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரையாக அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை நான்காயிரம் கி.மீ., தூரம் கிளம்பியுள்ளனர். சட்டீஸ்கரின் அடர்ந்த காடுகளை நடந்தே கடந்த இக்குழு மகராஷ்டிரா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்துள்ளது. பயணத்தின் இறுதி கட்டத்தை நெருங்கிய இவர்கள் நேற்று ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருப்புவனத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் திரளாக வந்திருந்து வரவேற்பு அளித்தனர்.

ஷிப்ரா பதக் கூறுகையில் : காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் இணைப்பது இந்திய கலாச்சாரம் தான், நாங்கள் ராம் ஜானகி வான் கமன் பத் யாத்திரை என்ற பெயரில் பஞ்ச பூதங்களை பாதுகாக்க நடைபயணம் மேற்கொண்டு இறுதியாக ராமேஸ்வரத்தில் நிறைவு செய்ய உள்ளோம், வழிநெடுக பத்து லட்சம் மர கன்றுகள் வரை நடவு செய்துள்ளோம், நதிகளை இணைத்தால் விவசாயம் பெருகும், எனவே நதிகள் இணைப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ராமர் சீதையை காக்க ராமேஸ்வரம் வழியாக அணில், அனுமார் உடன் பாலம் அமைத்தார் எனவே இந்த வழியாக செல்வதில் பெருமை கொள்கிறோம், என்றார். இரவில் மட்டுமே பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை எடுத்து கொள்கின்றனர். பகல் முழுவதும் தண்ணீரை அருந்தியே நடைபயணம் மேற்கொள்கின்றனர். இளம் பெண் துறவி நடைபயணம் மேற்கொண்டதை அறிந்து பொதுமக்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து தண்ணீர் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த,  உத்திராயண புண்ணியகால ... மேலும்
 
temple news
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
கோவை;  மார்கழி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar