சிவராத்திரி மாசி வேட்டை; வேட்டையாடி சாமிக்கு படைத்து கிராம மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2024 11:03
நத்தம்; நத்தம் அருகே காட்டுவேலம்பட்டியில் பாரி கருப்பசாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி சிவராத்திரி மாசி வேட்டையாடி, பறவைகளை சமைத்து சாமிக்கு படைத்து திருவிழா கொண்டாடினர்.
நத்தம் காட்டுவேலம்பட்டியில் பாரி கருப்பசாமி கோயில் உள்ளது. மேலும் இக்கோயிலில் புள்ளும் மலையாண்டி, பொன்னழகு, பேச்சி, பஞ்ச மலச்சியா,வீர காளி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவை ஒட்டி காட்டுவேலம்பட்டி இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் சிவராத்திரி தினமான நேற்று பாரம்பரிய முறைப்படி காடுகளுக்கு வேட்டையாடச் சென்றனர். பின் அங்கு வேட்டையாடிய காடை, கௌதாரி, காட்டுக்கோழி, மலைத்தேன் உள்ளிட்டவைகளை மேளதாளம் முழங்க கயிற்றில் கட்டி தோரணமாக தொங்கவிட்டு ஊர்வலமாக வந்தனர். பின் பாரி கருப்பணசாமி கோயிலில் அதனை சமைத்து சாமிக்கு படைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அரிசி மாவு பிசைந்து பிரசாதமாக வழங்கினர். இதில் புன்னப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபிரகாஷ், கோயில் பூசாரிகள் கணேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.