ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில் மாசிக்களரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2024 12:03
மானாமதுரை; மானாமதுரை அருகே ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி களரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள ஏனாதி செங்கோட்டை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி களரி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டிற்கான விழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதை எடுத்து தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 8ம் தேதி 108 திருவிளக்கு பூஜையும், வைகை ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வந்து பச்சை வாழை பரப்பி பூஜையும், 9ம் தேதி கோயில் அருகே பல்வேறு கிராமத்தினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளுக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று நடைபெற்ற பாரிவேட்டை நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மன் கோமாளி கூட்டம் வேடுவர் வேடம் பூண்டு அம்மன் பாரி வேட்டைக்கு சென்று திரும்பி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 11ம் தேதி ஆடு, கோழிகளை பலிட்டு பொங்கல் வைக்கும் விழா நடைபெறறது. விழாவில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகர் சண்முகசுந்தரம் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு சிவகங்கை,மானாமதுரையில்ருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.