திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 05:03
திருப்புவனம்; திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்றுஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்புவனம் நகரின் காவல் தெய்வம் ரேணுகாதேவி பூமாரியம்மன் ஆகும், இங்கு வருடம்தோறும் மாசி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கிருந்தாலும் திருவிழா நடைபெறும் பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். கேட்ட வரம் தரும் அம்மன் என்பதாலும் நகரின் காவல் தெய்வம் என்பதாலும் பலரும் அம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்தாண்டு திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான இன்று கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.