அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே வாவிடமருதுரர் அம்மச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக 48ம் நாள் நிறைவு மண்டல பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் நேற்று காலை கோயில் முன் கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜை வழிபாடுகள் செய்தனர். கலசங்களில் நிரப்பப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மன் சக்தி பீடம், ஆபரண பெட்டி,பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. பொங்கல் வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மச்சி அம்மன் கோயில் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.