நாளை காரடையான் நோன்பு; கணவரின் ஆயுள் நீடிக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2024 01:03
திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்பதே முக்கியமான விருப்பமாக இருக்கும். கன்னிப்பெண்கள், நல்ல கணவன் தங்களுக்கு வாய்த்திட வேண்டும் என்று விரும்புவர். மணமான பெண்கள், தீர்க்க சுமங்கலி வரம் வேண்டியும்; கன்னியர், மனதுக்குப் பிடித்த மணவாளன் கிட்ட வேண்டியும் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. நாளை நோன்பு நாளில்
என்ற ஸ்லோகத்தைச் சொல்வது அவசியம். அல்லது அதே அர்த்தத்தில், “உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் வைத்து, நோன்பு நோற்றேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்” என்று வேண்டிய படியே நோன்புச் சரடினைக் கட்டிக் கொள்ள வேண்டும். வெற்றிலை - பாக்கு, வெண்ணெய், அரிசியில் செய்யப்பட்ட வெல்ல அடை, கார அடையே இதன் நைவேத்யமாகும்.