பதிவு செய்த நாள்
13
மார்
2024
01:03
திற்பரப்பு; திற்பரப்பு மகாதேவர் கோவிலில் 10 நாள் பங்குனி ஆறாட்டு திருவிழா நேற்று கொடி ஏற்றதுடன் துவங்கியது. திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனிஆறாட்டு திருவிழா நேற்று சனிக்கிழமை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடியேற்று நிகழ்ச்சிகள் துவங்கியது. காலை 8.50 மணிக்கு கோவில் தந்திரி சஜித் சங்கர நாராயணரு திருக்கொடி ஏற்றினார்.குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் துளசீதரன் நாயர், ராஜேஷ், வேட்டை குறுப்பு சதீஷ்பாபு, குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், கோவில் ஸ்ரீகாரியம் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை லட்சதீப அலங்காரத்துடன் தீபாராதனை, இரவு பாகவதசப்தாகம் துவக்க நிகழ்வு நடந்தது. நான்காம் விழாவான 12ம் தேதி காலை உண்ணியூட்டு, மாலை வித்யா கோபால மந்திர அர்ச்சனை, இரவு பறை சமர்ப்பணம் நடக்கிறது. 13ம் தேதி காலை 10 மணிக்கு நவக்கிரக பூஜை , மாலை 5 மணிக்கு ஸர்வ ஐஸ்வர்ய பூஜை , இரவு 8.30க்கு கதகளி, 14ம் தேதி மாலை 5.30க்கு லக்ஷ்மி நாராயண பூஜை , 16ம் தேதி மதியம் சப்தாகம் நிறைவு விழா நடக்கிறது. 17ம் தேதி காலை 9மணிக்கு மிருத்யுஞ்சய ஹோமம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 11 மணிக்கு பள்ளிவேட்டை, விழா நிறைவு நாள் 18ம்தேதி காலை 10.30 மணிக்கு ஆறாட்டு, 11.30 மணிக்கு கலசாபிஷேகம், மதியம்12.30 மணிக்கு கொடிஇறக்கம், 1 மணிக்கு சிவேலி பூஜை நடக்கிறது.