மானாமதுரை; மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள கைலாசநாதர், ஆவுடைய நாயகி அம்மன் கோயிலில் நடந்த வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள கைலாசநாதர் ஆவுடைய நாயகி அம்மன் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர்,சந்தனம், குங்குமம்,தயிர்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம், அபிஷேக,ஆராதனைகள் நடந்தது.பின்னர் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து பூஜைகள் செய்து சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.இந்த விழாவில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் வேம்பத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.