Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா; வரும் ... உச்சிமாகாளி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் உச்சிமாகாளி அம்மனுக்கு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வளாகத்தில் அலுவலகம் கட்ட பக்தர்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
கோவில் வளாகத்தில் அலுவலகம் கட்ட பக்தர்கள் எதிர்ப்பு

பதிவு செய்த நாள்

19 மார்
2024
03:03

திட்டக்குடி; வைத்தியநாதசுவாமி கோவில் வளாகத்தில், கோவில் ஆய்வாளருக்கு அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தலையில் செங்கல்லை வைத்து பக்தர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் வளாகத்தில் கோவில்ஆய்வாளர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக பணிகள் நடக்கிறது. அரசு விதிகளை மீறி கோவில் வளாகத்தில் கட்டடம் கட்டக்கூடாது என சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி பணிகள் நடந்ததால், இன்று மதியம் 12மணிக்கு அகில பாரத சிவனடியார்கள் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், பா.ஜ.,திட்டக்குடி நகர தலைவர் பூமிநாதன் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் தலையில் செங்கல்லை வைத்து கோவில் வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச்செய்தனர். திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன், கட்டுமானப்பணிகள் நடந்த இடத்தைப்பார்வைிட்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பணிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கூட்டம் நடத்தி தீர்வு காண முடிவெடுக்கப்பட்டது. இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar