Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ... திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் சித்திரை உற்சவங்கள் 10 நாட்கள் விமரிசையாக நடக்கின்றன
எழுத்தின் அளவு:
கோவில்களில் சித்திரை உற்சவங்கள் 10 நாட்கள் விமரிசையாக நடக்கின்றன

பதிவு செய்த நாள்

02 ஏப்
2024
07:04

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழாவும், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் ஆகிய கோவில்களில் பிரம்மோற்சவமும், இம்மாதம் நடக்க உள்ளன. வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா, வரும் 13ம் தேதி விநாயகர் வழிபாடு, 14ம் தேதி கொடியேற்றுதல் என துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது.

மூன்றாம் நாளான 16ம் தேதி, வெள்ளி அதிகார நந்தி மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடக்கிறது. ஏழாம் நாளான 20ம் தேதி, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட சுவாமி யர், திருத்தேரில் உலா செல்கின்றனர். இறுதியாக, 24ம் தேதி, வியாபாரிகள் சங்கத்தினர் உற்சவம் நடத்துகின்றனர். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாககொண்டாடாமல் தடைபட்ட சித்திரை பிரம்மோற்சவ விழா, தற்போது நடக்கிறது. சேனை முதல்வர் புறப்பாடு வரும் 16ம் தேதியும், மறுநாள் கொடியேற்றுதலுடன் துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. ஐந்தாம் நாளான 21ம் தேதி, கருட சேவையாற்றுதலும், ஏழாம் நாளான 23ம் தேதி, திருத்தேரில் சுவாமி உலாவும், 25ம் தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, வரும் 22ம் தேதி அங்குரார்ப்பணம் நடத்தி, 23ம் தேதி கொடியேற்றுதலுடன் துவங்கி, மே 2ம் தேதி வரை நடக்கிறது. ஐந்தாம் நாளான வரும் 27ம் தேதி, கருட சேவையாற்றுதலும், ஏழாம் நாளான 29ம் தேதி, திருத்தேரில் உலா செல்லுதலும்,10ம் நாளான மே 2ம் தேதி தெப்போற்ச வமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ... மேலும்
 
temple news
சேலம்; சேலத்தில், தத்வமஸி ஞானபீடம் சார்பில், அகில பாரத ஐயப்ப பக்தர்கள், 2 நாள் மாநாடு, நேற்று முன்தினம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: உலக நலன் வேண்டிஒன்பது வயது மாணவன், சிவன்மலை கோவிலின், 496 படிகளிலும் யோகாசனம் செய்தபடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar