Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடகரை பகவதி அம்மன் கோயிலில் மறுபூஜை திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவாஷ்டமி வழிபாடு திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2024
10:04

பாலக்காடு; நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற நெம்மாரா பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் வேலா என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. காலை "பள்ளிவாள் கடயல் நிகழ்ச்சியுடன் கோவிலில் ஆச்சார சடங்குகள் ஆரம்பித்து. 5 க்கு கணபதி ஹோமம், "வரியோலை வாசிப்பு, நெல் பறை எடுப்பு ஆகியவை நடந்தன.10 க்கு பகவதி அம்மனுக்கு அபிஷேகவும் சிறப்பு பூஜையும் நடந்தது. 11 மணிக்கு சோற்றானிக்கரை விஜயன் மாரார் தலைமையில் 50 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு உள்ள பஞ்ச வாத்தியம் முழங்க யானைகள் அணிவகுப்பில் அம்மன் எழுந்தருளி தெரு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 4.30 மணிக்கு கலாமண்டலம் சிவதாசனின் தலைமையில் 50க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட "பாண்டி மேளம் என்று அழைக்கும் செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்து மணி குடைகள் சூடிய 9 யானைகள் கோவில் வாசல் முன் அணிவகுத்து நின்று "குடை மாற்றம் நிகழ்வு நடந்தன. இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர். மாலை 6.30 மணிக்கு விழாவின் சிறப்பு அம்சமான பிரமாண்ட வான வேடிக்கை நடந்தது. இதேபோல் இன்று அதிகாலை 3 மணிக்கும் பிரமாண்ட வானவேடிக்கை நடந்தன. இந்த வான வேடிக்கையை காண மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவை ஒட்டி பகுதியில் போலீஸ் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தி இருந்தன. கோவிலில் இன்று காலை நடக்கும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து விழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், தனி சன்னதியில் அருள்பாலித்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு, ராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar