மேலுார்; மேலூரில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா துவங்கியது. ஏப்.9 சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஏப். 10 பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிறகு முளைப்பாரி ஊர்வலமும் அன்னதானமும் நடந்தது. இன்று ஏப். 11 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.