கருமத்தம்பட்டி; கணியூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கணியூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 2 ம்தேதி சாமி சாட்டுதலுடன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று முன்தினம் இரவு அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். பல்வேறு திரவியங்களால் மாகாளியம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.