திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 04:04
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்கள் தினமும் அம்மன் காமதேனு, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு நாட்களுக்கு முன்பு பொங்கல் திருவிழா, மறுநாள் கயறுகுத்து திருவிழா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள ஏராளமான பக்தர்களை தேரை வடம் பிடித்து இழுத்தனர்.