மாப்பிள்ளை வீரன் கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசி வினோத விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 06:04
நாகை; வேதாரண்யம், தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா மார்ச் 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், சுவாமி தினமும் வீதி உலா வந்து அருள்பாலித்து வந்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வாழைப்பழம் வீசும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டு எடுத்து சென்றனர். விழாவில் நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.