பதிவு செய்த நாள்
12
ஏப்
2024
11:04
கொல்லங்கோடு; கொல்லங்கோடு காளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா கடந்த 1ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதை ஒட்டி வட்டவிளை மூலஸ்தான கோவிலில் இருந்து அம்மன் விக்ரகங்கள் வெங்கஞ்சி திருவிழா கோவி லுக்கு எழுந்தருளியது.
விழா நாட்களில், வழக்கமான பூஜைகளுடன் பல்வேறு சிறப்பு நிகழ்ச் சிகள் நடந்தது. நேற்று முன்தினம் (10ம் தேதி) அதிகாலை 6.30 மணிக்கு தூக்க நேர்ச்சை துவங்கியது. நேற்று அதிகாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடந்த நிகழ்வில், தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,358 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு அம்மன் விக்ரகங்கள் மீண்டும் வட்டவிளை மூலஸ்தான கோவிலுக்கு எழுந்தருளியது. தேவஸ்தான தலைவர் வழக்கறிஞர் ராமச் சந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சதிகுமாரன் நாயர், இணைச் செயலாளர் பிஜு குமார், உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகு மாரன் நாயர், பிஜு, சதி குமாரன் நாயர் ஆகியோர் முன்னிலையில் அம்மன் விக்ரகங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதை அடுத்து வட்ட விளை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று முதல் வெங்கஞ்சி திருவிழா கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். வட்டவிளை மூலஸ்தான கோவிலில் வழக்கமான பூஜைகள் நடக்கும்.