திருவாரூர்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசீர்வாதத்துடன், சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி மஹோத்ஸ்வம் - கர்நாடக இசையின் தெய்வீக மும்மூர்த்திகள் - ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் ஜெயந்தி மஹோத்ஸ்வம் ஏப்ரல் 11 மற்றும் 16, 20 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. விசேஷ பூஜைகள், மற்றும் பல இசை பிரசாதங்கள். நிகழ்ச்சியை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கர்நாடக சங்கீத சேவா டிரஸ்ட் மற்றும் சங்கீதா மும்மூர்த்தி ஜெயந்தி விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளி அனுக்கிரஹத்தோடு ஸ்ரீமடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளாசியோடு தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத சேவா டிரஸ்ட் மூலம் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் இல்லங்கள் தொடர்ந்து நல்லவிதமாக பராமரிக்கப்படுவதோடு ஸ்ரீ சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா குழுவினர் மூலம் ஜெயந்தி விழா சமயம் ஸ்ரீ மும்மூர்த்திகளின் இயற்றிய கீர்த்தனைகளை பாடி சங்கீதாஞ்சலி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் கால சூழ்நிலையை கருத்தில்கொண்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் இல்லம், ஸ்ரீ தியாகபிரும்மம் இல்லத்தில் சில கட்டிட அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு கூட ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் இல்லம் ஆடிட்டோரியத்தில் கட்டிட வேலைகள் இனிதே நிறைவுற்று ஸ்ரீ பெரியவாளின் ஆக்ஞை, அருளாசியோடு கும்பாபிஷேகம் சென்ற (24.03.2024) அன்று நடைபெற்றது. இங்கு நேற்று (11ம் தேதி) மங்கல இசையுடன் துவங்கிய விழாவில் ஸ்ரீ வித்யா நவாவர்ண பூஜை, முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவாவர்ண கீர்த்தனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.