மானாமதுரை சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.14ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 02:04
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நாளை ஏப்.14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். கோவில் முன்பாக வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வைகை ஆற்றுக்குள் சிறுவர்களுக்காக ராட்டினங்கள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா ஏப்.14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியிலிருந்து 10:30மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளும், ஏப்ரல் 22ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகர் சோமசுந்தரம் ஆகியோர் செய்து வருகின்றனர்.