மேலுார் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 03:04
மேலுார்; மேலுார், மேலத்தெரு சக்திமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 29 காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருந்தனர். இன்று (ஏப்.12) பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது. நாளை (ஏப்.13) பூத்தட்டு, முளைப்பாரி அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடனும், புஷ்பரதத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்.14 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெறும். ஏப்.19 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.