வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 04:04
வாடிப்பட்டி; வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலை சிவாச்சாரியார் விஸ்வநாதன் தலைமையில் விக்னேஸ்வர சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. கோயில் பிரகாரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன.பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் தலைவர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள் அசோக்குமார், சூர்யா, கார்த்திகாராணி பங்கேற்றனர். விழா நாட்களில் அம்மன் தினமும் மாலை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்வாக ஏப்.,19 பட்டாபிஷேகம், 20 திக்விஜயம், 21 திருக்கல்யாணம், 22 தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுவினர், கிராமத்தினர் செய்கின்றனர்.