Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித தலமான வாரணாசியில் நகரத்தார் ... மங்களூரு கோவில் திருவிழா; ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தம் எறிந்து நேர்த்தி கடன் மங்களூரு கோவில் திருவிழா; ஒருவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓம் நமசிவாய கோஷம் விண்ணை முட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஓம் நமசிவாய கோஷம் விண்ணை முட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
07:04

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம், ஓம் நமசிவாய கோஷம் விண்ணதிர நேற்று கோலாகலமாக நடந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பக்தர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்றதுமான தலம், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராக, இக்கோவில் தேர் விளங்குகிறது. இந்தாண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி நடந்தது. கடந்த 19ம் தேதி கற்பகவிருட்சம் காட்சி, திருக்கல்யாணம், வெள்ளை யானை வாகனத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி சந்திரசேகரப் பெருமான் காட்சியளித்தார். நேற்று பெரிய தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார்.

காலை 9:50 மணியளவில் பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 12:06 மணியளவில் தேர் மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர் நிலை நிறுத்தப்படும். கடும் வெயில் பாதங்களை சுட்டெரித்த போதிலும், நீண்ட நேரம் காத்திருந்து, தேர் ரத வீதிகளில் ஆடி அசைந்தவாறு வருவதை கண்ட பக்தர்கள் ஏராளமானோர், அரோகரா... ஓம் நமசிவாயா என விண்ணதிர கோஷம் எழுப்பி பக்திப்பெருக்குடன் மனம் குளிர்ந்தனர். சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், கோவில் செயல் அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை அம்மன் தேர் எனப்படும் சின்ன தேர் வடம் பிடித்து இழுத்து நிலை நிறுத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar