Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வழுவூர் பாலமுருகன் கோயிலில் சித்ரா ... அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன் தேர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர் அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன் தேர்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்க நாச்சியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழா; முதல்நாள் தேரோட்டம் துவங்கியது
எழுத்தின் அளவு:
மாணிக்க நாச்சியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழா; முதல்நாள் தேரோட்டம் துவங்கியது

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
04:04

திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று மூலஸ்தானத்தை நோக்கி முதல்நாள் தேரோட்டம் துவங்கியது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.16 ல் காப்புக்கட்டி துவங்கியது.  தொடர்ந்து தினசரி காலை  அலங்காரங்களில் வெள்ளிக்கேடகத்தில் அம்பாள் புறப்பாடும், இரவில்  வாகனங்களில் அம்மன் திருவீதிஉலாவும் நடந்தது. இன்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மகா கணபதி, மாணிக்கநாச்சி , அம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்கள் தொடர்ந்து கணபதிக்கும், அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலையில் பெண்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை கிடத்தி கோயில் குளத்தையும், தேரையும் வலம் வந்து தங்கள்  குழந்தைக்கு தொட்டில் கட்டும் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து  தேர்வடம் பிடித்து தெற்குபட்டு மூலஸ்தானம் நோக்கி தேர் புறப்பட்டது. தெற்குப்பட்டில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. நாளை காலை 9:00 மணிக்கு மூலஸ்தானத்திற்கு பக்தர்கள்  பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெறும். மாலையில் 6:00 மணி அளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கோயில் வந்தடையும். தொடர்ந்து இரவில்  7:00 மணிக்கு பன்னீர் திருவிழா  நடைபெறும். நாளை மறுநாள் காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, மஞ்சுவிரட்டும், இரவு 10:30 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் பவனியுடன் விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar