Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் ... பொன்னேரி கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் விமரிசை பொன்னேரி கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூழமந்தலில் 27ல் சித்திரை பெருவிழா
எழுத்தின் அளவு:
கூழமந்தலில் 27ல் சித்திரை பெருவிழா

பதிவு செய்த நாள்

25 ஏப்
2024
04:04

காஞ்சிபுரம்: கூழமந்தலில் வரும் 27ம் தேதி சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதில் கூழமந்தல், நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், கங்கை கொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், பேசும் பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி கூழமந்தல் மைதானத்தில் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றனர்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல் மைதானத்தில் சித்திரை பெருவிழா வரும் 27ம் தேதி, இரவு 7:00 மணி முதல், மறுநாள் அதிகாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி, இக்கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேசும் பெருமாள் ஆகிய மூலவர்களுக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு மேல் நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி, கோவிலில் இருந்து வீதியுலாவாக சித்திரை பெருவிழா நடைபெறும் மைதானத்தில் தங்களது வாகனங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு 16 வகையான நறுமண பொருட்களால் விசேஷ அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் ஆகியோரை, நட்சத்திர விருட்ச விநாயகர், மூன்று முறை வலம் வந்து வணங்கி, ஆசீர்வாதம் பெற்று கஜமுக அசுரனை வதம் செய்யும் உன்னத நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, உலகத்தை காக்க மும்மூர்த்திகளுக்கு அருளுரை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக மகா தீபாராதனை, வீதியுலா நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar