Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லை ஸ்தலசயன பெருமாள் ... கூழமந்தலில் 27ல் சித்திரை பெருவிழா கூழமந்தலில் 27ல் சித்திரை பெருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை

பதிவு செய்த நாள்

25 ஏப்
2024
03:04

காஞ்சிபுரம்: ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் விமரிசையாக நடந்தது.

உற்சவத்தையொட்டி உபயநாச்சியாருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கடந்த 22ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, மேனாப் பெட்டியில் எழுந்தருளி அய்யங்கார்குளம் கிராமத்திற்கு புறப்பட்டார். இரவு 1:00 மணிக்கு செவிலிமேடில் கிராம வீதிகளில் உலா வந்தார். நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, புஞ்சையரசந்தாங்கல், வாகை, துாசி கிராமத்தில் வீதியுலா வந்தார். பிற்பகல் 12:00 மணிக்கு துாசி வைகுண்ட பெருமாள் கோவிலில் சுவாமிக்கு மரியாதை நிகழ்ந்தது. அங்கிருந்து பிற்பகல் 1:30 மணிக்கு புறப்பாடாகி அப்துல்லாபுரம் மற்றும் அய்யங்கார்குளத்தில் வீதியுலா சென்று, இரவு 8:00 மணிக்கு அய்யங்கார்குளம் கிராமத்தில் சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளினார், அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அங்கிருந்து 9:00 மணியளவில் புறப்பாடாகி தாதசமுத்திரம் ஏரிக்கரை வழியாக சென்று, 9:30 மணிக்கு நடவாவி கிணற்றில் வரதராஜ பெருமாள் இறங்கினார். அங்கு பக்தி உலாத்தல், பூஜைகள் நடைபெற்றபின், கிணற்றில் இருந்து வெளியே எழுந்தருளிய பெருமாள், புஞ்சையரசந்தாங்கல் வழியாக செவிலிமேடு பாலாற்று பந்தலில் இரவு 10:00 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், பிரம்மாராதமன், நிவேதனம், பூஜைகளுக்குப்பின், பாலாற்றங்கரையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar