பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
04:04
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், 27 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை திருத்தணி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், காஞ்சிபுரம் திருக்கோவில்கள் மண்டல அலுவலர் வான்மதி ஆகியோர் முன்னிலையில், உண்டியலை திறந்து கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 94 லட்சத்து, 45 ஆயிரத்து, 487 ரூபாய், 416 கிராம் தங்கம், 7.45 கிலோ வெள்ளி கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளன.