Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... பந்தலூர் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் பரவசம் பந்தலூர் கோவில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகருக்கு பாதசேவை செய்யும் பட்டாச்சாரியார்; தலைமை அர்ச்சகர் நம்பி விளக்கம்
எழுத்தின் அளவு:
அழகருக்கு பாதசேவை செய்யும் பட்டாச்சாரியார்; தலைமை அர்ச்சகர் நம்பி விளக்கம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2024
10:04

அழகர்கோவில்: வைகையாற்றில் இறங்கியபின் கோயிலுக்கு திரும்பும் அழகருக்கு, உடல் வலியை போக்க சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் பாதசேவை செய்வது வழக்கம் என கள்ளழகர் கோயில் தலைமை அர்ச்சகர் நம்பி பட்டாச்சாரியார் கூறினார்.

அவர் கூறியதாவது: அழகருக்கும், அர்ச்சகருக்கும் உள்ள நேசம் ஒரு தாய் குழந்தையை பாவிப்பது போன்றது. நீராட்டுதல், பிரசாதம் வழங்குதல் போல ஒரு தோழராக இருந்து அவருக்கு பாதசேவை செய்கிறோம். அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வைகையாற்றில் இறங்கி, திரளான பக்தர்களின் தீர்த்தவாரியில் நனைந்து, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கி, தசாவதார நிகழ்வில் கலந்து கொள்வதுடன், பூப்பல்லக்கில் மலைக்கு திரும்புவார். அப்போது அவரது உடல், பாதங்கள் அசதியாக இருக்கும். அதற்காக சுவாமியின் தோழராக இருந்து நாங்கள் இந்த சேவையை செய்கிறோம். முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்களின் பாதங்களை, அவர்களின் பிள்ளைகள், பேரன், பேத்திகள் இதமாக பிடித்து விடுவது வழக்கம். நம்மை காக்கும் கடவுளுக்கு மாலை, அணிகலன்கள், பட்டு ஆடைகள், பிரசாதம் போன்றவற்றை எந்த நம்பிக்கையில் படைக்கிறோமோ, அதே நம்பிக்கையில் இந்த பணிவிடையையும் செய்கிறோம். அதை சுவாமி ஏற்றுக்கொள்வது போலஇதையும் ஏற்றுக்கொள்வார் என்பது நம்பிக்கை. ஒரு அர்ச்சகர் கடவுளுக்கு நவரசங்களுடன் சேவை செய்ய வேண்டும். அவற்றில் இதுவும் ஒன்று. அந்தச் சேவையை வம்சாவழியாக நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar