இக்கோயிலுக்கு கடந்த ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மூலவர் சன்னதி முன்பாக. காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்த புனித கலசநீரால் மூலவருக்கும்,உற்ஸவருக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 6:30 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம்,பக்தர்கள்,மணிகண்டன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்கின்றனர்.