குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2024 01:05
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி முன்னதாக ஏப்.23 சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மே.1 அதிகாலை அம்மன் வானவேடிக்கை மற்றும் முளைப்பாறியுடன் பவனி வந்து கோவில் வந்தடைந்தது. பின் பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். மதியம் அன்னதானம் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாறுவேடத்துடன் மஞ்சள் நீராடுதல் நடந்தது.