காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் சௌடேப்பள்ளி மண்டலம் போயகொன்ட கிராமத்தில் வீற்றிருக்கும் சக்தி ஸ்வரூபிணியான போயக்கொன்ட கங்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு இன்று வெள்ளிக்கிழமை ராகு கால பூஜைகள் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். ஆந்திர மாநிலத்திலிருந்து மட்டுமின்றி தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வி.நாகராஜாரெட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கோயில் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேவஸ்தான நிர்வாகம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு சிறப்பு மலர்களாலும் , தங்க ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை ராகு கால சமயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு போயக்கொன்ட கங்கையம்மனை வழிப்பட்டனர்.