எருமைப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 02:05
தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே எருமைப்பட்டி முத்து மாரியம்மன் கோவில், மற்றும் ஊர்காவலன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, அணுக்கை, விக்னேஸ்வரர், கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்றது. பின்பு, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோவில் கோபுரங்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு, இரண்டு கோவில் கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினார் செய்திருந்தனர்.