குத்திலுப்பையில் கோயில் விழா; துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 01:05
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே குத்திலுப்பை ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில்களில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. நேற்று காலை சுவாமிகளுக்கு யாகம் செய்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் செலுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பக்தர்கள் தீர்த்த காவடிகளுடன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.